கோ ஆப் டெக்ஸ்டில் வண்ண வண்ண பட்டுப்புடவைகள்! திருவாரூர் ஆட்சியர்துவக்கி வைத்தார்!

கோ ஆப் டெக்ஸ்டில் வண்ண வண்ண பட்டுப்புடவைகள்! திருவாரூர் ஆட்சியர்துவக்கி வைத்தார்!

க.பாலகுரு,

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள், கூறைநாடு புடவைகள், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சிலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்புத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. 
திருவாரூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2022ல் ரூ.23.33 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூ.50.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர்.ப.அம்சவேணி, மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி(கூடுதல் பொறுப்பு).சி.அய்யப்பன், திருவாரூர் வட்டாட்சியர்.நக்கீரன், திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள்.வெங்கடேசன், சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.