மசூதிகளை புனரமைக்க ரூ.10 கோடி நிதி! அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

மசூதிகளை புனரமைக்க ரூ.10 கோடி நிதி! அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

  ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மசூதிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் புனரமைக்க ரூ.10 கோடி நிதி வழங்குகிறது என வேலூரில் நடந்த திமுக சிறுபான்மை பிரிவு மாநில கருத்தரங்கில் சிறுபான்மைத்துறை மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

 வேலூர்மாவட்டம், வேலூரில் திராவிட முன்னேற்ற கழக சிறுபான்மை பிரிவு மாநில கருத்தரங்கம் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் நூருல்லா தலைமையில் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார்,அமுலு மற்றும் மேயர் சுஜாதா, பொறுப்பாளர் சபாபதி மோகன் உள்ளிட்டோரும் திரளான திமுகவினர் பங்கேற்றனா.

 ¢ இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியின் காரணமாக சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் மசூதிகள் பழமையானவைகள் சீரமைப்பதற்காக ரூ.10 கோடியும் அதே போல் கிறிஸ்தவ தேவாலயங்களை பராமரிக்க புணரமைக்கவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

   மேலும் சிறுபான்மை மகளிர் கல்விக்காகவும் நல்ல பல திட்டங்களை மேலும் கபஸ்தலா எனப்படும் சிறுபான்மை மக்கள் நல்லடக்கம் செய்யும் இடங்கள் அரசு வசம் இருந்தால் ஆட்சியர்கள் மூலம் இடம் ஒதுக்கி இஸ்லாமிய மக்கள் நல்லடக்கம் செய்ய வழிவகை செய்வதுடன், காலி இடம் தனியார் வசம் இருந்தால் சமுதாய பெரியவர்கள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அரசின் ரூ.1 கோடி நிதியுடன்  நல்லடக்கம் செய்யு இடங்களையும் வழங்கும் திட்டம் ஆகியவைகளை செயல்படுத்தி வருகிறது இதன் மூலம் சிறுபான்மை மக்கள் நலன் கள் பாதுகாக்கபடுகிறது என பேசினார்.