பயணிகளை வெறுப்பேற்றிய அரசு ஏ.சி.பஸ்!

பயணிகளை வெறுப்பேற்றிய அரசு ஏ.சி.பஸ்!

ஜி.கே.சேகரன்,

அரசு குளிர்சாதன பேருந்து பழுதாகி நின்றதால் நள்ளிரவில் பயணிகள் அவதி அடைந்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   ஓசூரில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு 35க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்து ஆம்பூர் அருகே இரவு 11 மணிக்கு வந்த போது திடீரென கியர்  விழாமல் பழுதாகி நின்றது.

 ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மாற்றுப் பேருந்தும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

   இதனால் பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாங்குவதற்கு ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து பயணிகள் பயணசீட்டை கொடுத்துவிட்டு பாதி பணத்தை பெற்றுக் கொண்ட பயணிகள் அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி பயணம் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.

   மேலும் இந்த குளிர்சாதன பேருந்துகள் திமுக ஆட்சியில் சரியான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே பழுதாகி நிற்கக்கூடிய அவல நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.