இது மன்னர் ஆட்சி… கேட்பதற்கு ஆள் இல்லை முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு!

இது மன்னர் ஆட்சி… கேட்பதற்கு ஆள் இல்லை முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு!

ஜி.கே.சேகரன்,

ஆயிரம் ரூபாய் தருவதை விட தொடர்ந்து 100 நாள் வேலையை கொடுங்கள், அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்,

மன்னர் ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கின்றது,கேட்பதற்கு ஆள் இல்லை, சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார்கள்ஆம்பூர் அருகே நடைப்பெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.

 வாணியம்பாடியில் உள்ள சுற்றுசூழல் அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்யாயதால் பாலாறு பாழாகிறது, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின், 116 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

   அப்பொழுது கனமழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும்  பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா கே.சி.வீரமணி, விலைவாசி ஏறிவிட்டது மின்சார கட்டணத்தை 4 முறையும், பால் விலையை பலமுறையும், ஏற்றியுள்ளனர்.

  ஒரு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் செலவு என்றால் தற்போது 10 ஆயிரம் ரூபாய் ஆகிறது, அந்த அளவு ஆட்சி அவலம் உள்ளது.

  கடந்த ஆட்சியில் போதை பொருட்கள் இல்லை, கருணாநிதியின் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக இந்த ஆட்சிஇது மன்னர் ஆட்சி, கேட்பதற்கு ஆள் இல்லை, சர்வதிகாரிபோன்று செயல்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

  இந்த ஆயிரம் ரூபாயை அங்கொன்றும் இங்கொன்றும் கொடுக்கிறார்கள், ஆனால் நூறுநாள் வேலையை கூலி உயர்த்தாமல், தொடர்ந்து கொடுத்தால், போதும்அவர்கள் தினமும் 100 ரூபாயை சம்பாதித்து கொள்வார்கள்.

   தூத்துக்குடியில் ஸ்ட்ரைக் செய்தார்கள் என்று, காவல்துறையினர்  துப்பாக்கிசூடு நடத்தியதில் 2 பேர் இறந்து விட்டார்கள், அதை பெரிய பூதகரமாக மாற்றிய ஸ்டாலின், ஆனால் கள்ளக்குறிச்சியில் 70 பேர் இறந்ததற்கு, நேரில் சென்று ஆறுதல் செல்ல செல்லவில்லை.

 சாராய ஆலை அனைத்தும், திமுகவினர் நடத்துக்கின்றனர். அதில் அவர்களுக்கு 60 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கின்றது. மேலும் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என பேசினார்.

 அடுத்து  வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசின்ர்,   பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் உள்ள  தோல்தொழிற்சாலைகளில், தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

  அப்பொழுது 100 சதவிகதிம் தோல் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் பாலாற்றில் விடுவதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

  அதனை தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும், 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.

    வாணியம்பாடி சுற்றுச்சூழல் அதிகாரிகள் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை, அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால், பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுக்கலாம்திருப்பத்தூர் மாவட்டத்தில், சட்ட ஒழுங்கு முற்றிலும், சரியில்லை.  குடும்ப அரசியல் இல்லை என்ற அண்ணாவின் கட்சியில் வெறும் குடும்பம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது என பேசினார்.

 இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என கொட்டும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.