ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர்!

த.நெல்சன்,
வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் சரியான அளவில் விநியோகிக்கப்படுகிறதா என பார்வையிட்டார்.
மேலும், உணவுப் பொருட்கள் இருப்பு மற்றும் விநியோக விவரங்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.
அதே போல் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று (14.03.2023) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.வேதநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சஞ்ஜீத், நன்னடத்தை அலுவலர் திரு.ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.