ஆக்கிரமிப்புகளை அகற்று..... மாற்று இடம் கொடு! இரண்டையும் நீதிமன்றம் தான் சொல்கிறது! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் சொல்வதால் தொடர்ந்து அகற்றுகிறோம். அதே நீதிமன்றம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க கூறுகிறது, மழைகாலங்களில் நீர் தேங்காத அளவு முன் ஏற்பாடுகளை செய்கிறோம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி என்பதால் குறை கூறி கொண்டும் தான் இருப்பார் செயல்பாடை பற்றி அவரே சொல்வார் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரு பூஜையை முன்னிட்டு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி,காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மழைகாலங்களில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் நிரம்பினால் முன் எச்சரிக்கையாக நீர்தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் சொல்லி தான் அகற்றுகிறோம்.
அதே நீதிமன்றம் மாற்று இடம் அவர்களுக்கு கொடுக்க சொல்கிறது மாற்று இடம் வழங்கி வருகிறோம்.
இரண்டையும் நீதிமன்றம் தான் சொல்கிறது, ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதித்து வருகிறோம் ஆங்காங்கே முறைகேடுகள் நடக்கிறது. எங்கு தான் நடக்காமல் இருக்கிறது?
சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்ட போது ஒன்றும் சொல்லவில்லை.
மேலும் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி திமுகவின் செல்வாக்கு சரிவது குறித்து கேட்டதற்கு எதிர்க்கட்சிகாரர் அப்படி தான் கூறுவார் அவரின் எதிர்க்கட்சித் தலைவர் செயல்பாடு எப்படி இருக்கிறது என அவர் தான் கூற வேண்டுமென சொன்னார்.