அமைச்சரை கோபமடையச் செய்த அதிகாரிகள்!விருட்டென வெளியேறியதால் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை அதிகாரிகள் கோபடையச் செய்ததால் அவர் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு கிளம்பிவிட்டார்.
தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களினுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் , ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நோக்கிலும் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும் , மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்தது.
இதனை தொடக்கி வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் பயிற்சி முகாம் தொடங்கப்படுவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் மா.சு. மேடையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.
ஆடிப்போன போன அதிகாரிகள் அவர் பின்னாடியே ஓடினார்கள். இந்த பயிற்சிக்கு பெயரளவுக்கு செவிலியர்களை வரவழைத்து அதிகாரிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக குறை கூறிய அமைச்சர், இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை, இந்த நிகழ்ச்சியை இன்னொறு நாளைக்கு நடத்தலாம் என்று சொல்லியவாறு நடையை கட்டினார்.
நிகழ்ச்சி என்கிற பெயரில் பில்களை கிழித்து வாயில் போட்டுக்கொள்ளும் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு மா.சு.போன்ற அமைச்சர்கள் கண்டிப்பாக சுளுக்கெடுக்கத்தான் வேண்டும்.