மகளிர் குழு உறுப்பினர்கள் பெயரில் 75 லட்சம் வரை மோசடி! ஆட்சியரிடம் மனு!!

கு.அசோக்,
இராணிப்பேட்டை அருகே மகளிர் குழு உறுப்பினர்களின் ஆவணங்களை சேகரித்து, அவர்¢களுக்கே தெரியாமல் 9 லட்சம் ரூபாயை மோசடி செய்த கூட்டமைப்பின் செயலாளர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் மோட்டூர் பகுதியில் இயங்கி வரும் வைரம் மகளிர் குழு மற்றும் வள்ளியம்மை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில் கூட்டமைப்பின் செயலாளர் கௌரி என்பவர் பல லட்ச ரூபாய் பெருங்கடன் பெற்றுரேமாற்றியிருக்கிறார்.
எனவே தங்களை ஏமாற்றியதாக கூறி மகளிர் குழு உறுப்பினர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் புகார் மனுவை அளித்தார்கள்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, முகுந்தராயபுரம் ஊராட்சி கூட்டுறவு சங்கத்தின் வங்கியின் மூலம் குழுவிற்கு கடன் பெற்று தருவதாக குழு உறுப்பினர்களின் ஆவணங்களை கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் கௌரி என்பவர் வாங்கி கொண்டு அதன் மூலம் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வைரம் மகளிர் குழு மற்றும் வள்ளியம்மை மகளிர் சுய உதவிக்குழு சார்பில் கடன் கேட்டு வங்கிக்கு சென்ற போது ஏற்கனவே தங்களுடைய குழு உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 9 லட்சம் கடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகளிர் குழு உறுப்பினர்கள் இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இதே போன்று பல்வேறு மகளிர் குழுக்களின் பெயரில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் வரை உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தது.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து புகார் மனு அளித்தனர்.