புதிய சட்டங்களை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்கள்!நெல்லையில் லட்டு கொடுத்ததால் பதற்றம்!

ஜி.கே.சேகரன்,ஆரணி சந்துரு,
மத்திய அரசின் மூன்று புதிய சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அந்த சட்டங்களை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர்மாவட்டம்,
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்னர் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் மற்றும் மகளிர் வழக்கறிஞர் சங்கங்கள் இண்ய்ந்து மூத்த வழக்கறிஞர் அண்ணாமலை தலைமையில் நடந்த இதில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ரவி,அருணா ,பாலசந்தர்,சண்முகம்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்த இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம், சாட்சிகள் சட்டம்,உள்ளிட்ட மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தினர்.
இதை வலியுறுத்தி இன்று முதல் 8 ஆம் தேதி வரையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனா.¢ இதில் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனா.¢ இதே போன்று மாவட்டம் முழுவதும் 1050 வழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
அதே போல் இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 குற்றவியல் சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியாம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையே, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டங்களால் தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் எனக் கூறி பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் அரக்கோணத்திலும் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு அனைத்து நீதிமன்றங்கள் பணிகளில் இருந்து விலகி இருந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர்மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா.¢ அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சந்திரன், ஜோதிராமன், தமிழ்வேல், பிரித்திவிராஜ், ஜெயபிரகாஷ், ரமேஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் இந்தி மயமாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களை வாபஸ் பெறவும், புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர்கள் வைத்துள்ளதை கண்டித்தும், சட்டங்களின் பிரிவுகளை குறைத்து புதிய சட்டங்களை நடைமுறைப் படுத்துவதை கண்டித்தும் மற்றும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவும் வலியுறுத்தி ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதில் ஆரணி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். செயலாளர் தணிகாச்சலம், வழக்கறிஞர்கள் தனஞ்செயன், இராஜன், ஜீவா, சுகுமார், அமுல்குமார், பார்த்தீபன், ராஜேஷ், கு.கார்த்திக், கணேஷ், கோபண்ணா, சண்முகம், கனகராஜ், இளமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம்.
இதே போல் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய நிலையில் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஒரு சாரார் கொண்டாட்டமும், இன்னொரு சாரார் போராட்டமும் என இரு பிரிவாக பிரிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
பெரும்பாலான வழக்கறிஞர்கள் இந்த புதிய சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.பாஜக வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களின் அருகில் நின்றுக்கொண்டு பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து அவர்களை வெறுப்பேற்றினர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது.
ஆகவே அங்கு பெரிய அளவில் போலிசார் குவிக்கப்பட்டனர்.