கல்யாணம் முடிந்த பிறகும் பெண் பின்னாடி சுத்துவதா! கத்தியால் குத்தி தந்தை கொலை!

கு.அசோக்,
ராணிப்பேட்டைமாவட்டம்,ரத்தினகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(49) இவரது மனைவி செல்வி(43) இவர்களுக்கு கீதா(29 )திவ்யபாரதி(27) என இரண்டு பெண்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். கிருஷ்ணனின் இரண்டாவது மகள் திவ்யபாரதி என்பவருக்கு பக்கத்து கிராமமான மேல குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷ் (32)என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்
இதில் நரேஷ் மற்றும் திவ்யபாரதி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அப்படியிருக்க டி,சி குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிருபாகரன்(32) கிருஷ்ணனின் இரண்டாவது மகள் திவ்ய பாரதிக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே அவர் பின்னால் சுற்றிதிரிந்துள்ளார். இதனால் கிருஷ்ணன் மற்றும் கிருபாகரன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது,
பின்னர் திவ்ய பாரதிக்கு திருமணம் நடைபெற்ற பிறகு திவ்ய பாரதியை கிருபாகரன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பூட்டுத்தாக்கு பகுதியில் ஒரே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை ஒட்டி வந்த நரேஷ் மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு இடையே மோதல் நடைபெற்று வந்துள்ளது
இந்த நிலையில் இன்று டிசி குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே சாலையோரம் அமர்ந்து கிருஷ்ணன் மற்றும் அவரது மருமகன் நரேஷ் மற்றும் அப்பகுதி சென்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த கிருபாகரன் திடீரென ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்கி கிருஷ்ணன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரிடமும் சண்டையிட்டார். இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சண்டையை தடுத்து நிறுத்தி தனித்தனியே பிரிந்து செல்ல செய்துள்ளனர்
இருப்பினும் கிருபாகரன் தனது வீட்டிற்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து நரேஷ் மற்றும் சிலரை தாக்கி விட்டு கிருஷ்ணனை நெஞ்சு வயிறு போன்ற பகுதிகளில் பலமாக கத்தியால் குத்தினார்.
கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.