முப்படைதாக்குதலில் ஹமாஸை முற்றிலும் அழிப்போம்! இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்!

ஆர்.ரவிகாலேப்,
இஸ்ரால் மக்களை மொத்தமாக அழிக்கலாம் என்று நினைக்கும் ஹமாஸை முப்படை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசா பகுதியில் முப்படை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயா£ நிலையிக்க்கு வந்துவிட்டது. ஆயிரகணக்கான பீரங்கிகளுடன் 10 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஹமாஸ் தீவிரவாதிகள் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இன்று 10 -வது நாளாக போர் தொடர்கிறது.
ஹமாஸ் தீவிரவாதிகளின் நுக்பா படையின் தெற்கு பகுதி கமாண்டர் பிலால் அல் குவாத்ரா, காசாவின் தெற்கு பகுதியான கான் யூனிஸ் பகுதியில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பிலால் அல் குவாத்ரா உட்பட ஏராளமான ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கிறன.
இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் இது குறித்து தெரிவிக்கையில் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிலால் அல் குவாத்ரா மூளையாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலின் 2 நகரங்கள் மீதான தாக்குதல் அவரது தலைமையின்கீழ் நடந்துள்ளது. தற்போது எங்கள் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் உட்பட இதுவரை 3 ஹமாஸ் கமாண்டர்கள் உயிரிழந்துள்ளனர்'' என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை மூன்றூ மணி9 நேரத்துக்குள் தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மக்களுக்கு முதலில் 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும்6 மணி நேரம் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும்3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் ஏற்படுத்தி மனித கேடயம்
அப்படியிருக்க தெற்கு காசாவுக்கு தப்ப பயன்படுத்தப்படும் வழிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மூடிவிட்ட்டதால் லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை தீவிரவாதிகள் மனித கேடயங்களாக உபயோகிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் நேற்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, ''இஸ்ரேல் மக்களை அழித்துவிடலாம் என்று ஹமாஸ் கனவு காண்கிறது. அதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பை நாம் முழுமையாக அழித்துவிடுவோம். இஸ்ரேலின் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஓரணியாக செயல்பட வேண்டும்'' என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 10,000 வீரர்கள் ஏற்கெனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல் தொடங்கும். இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் நிலையில் உள்ளன. வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என்றுதெரிகிறது. இதனால், காசாவை ஒட்டிய இஸ்ரேலின் தெற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறைக்கு சென்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அவசர அவசரமாக பணிக்கு திரும்புகின்றனர். வீட்டை விட நாடு தான் முக்கியம் என்று அவர்கள் போர்களத்தில் உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள்.