சிறுபாண்மையினர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம்! இஸ்ரேலுக்கு டப் கொடுத்து அசத்தல்!!

சிறுபாண்மையினர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம்! இஸ்ரேலுக்கு டப் கொடுத்து அசத்தல்!!

 ம.பா.கெஜராஜ்,

  சிறுபாண்மையினர் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் பாசம் பொங்கி வழிந்திருக்கிறது. அதை நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

   அதிமுக தலைமை அலுவலகமான  சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுக்க வேண்டும்.

   பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும். இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஸ்திவாரம் என்று சொல்லக் கூடிய பூத் கமிட்டியை வலுப்படுத்துவது வலுப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை வழங்கினார்.

   நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். திமுக அரசு மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றவில்லை. மக்கள் வாழ முடியாத அளவுக்கு சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம்" என்று சொன்னார்.

சிறுபாண்மையினர் மீது பாசம்

   பாலஸ்தீனம் மீது போர்தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு  எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து சிறுபாண்ம்ண்ய்யினரின் வாக்குகளுக்கு குறிவைத்திருக்கிறார்.

 அந்த வகையில்¢ எடப்பாடி பழனிசாமி, இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் பலியாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர், அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் பொதுமக்கள் என காசா ஒரு பேரழிவு நகரமாக காட்சியளிக்கிறது.

  உலக நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்துக்கு உரியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  தமிழக அரசியலிலேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது, இஸ்ரேல் விவகாரம் எட்பபாடிக்கு இப்போது அவசியமா என திமுகவினரும், நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.

  ஆனால், இதற்கு பின்னாலும் அரசியல் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதாவது, பாஜகவை விட்டு அதிமுக விலகினாலும் முஸ்லிம்கள் முன்பு போல அக்கட்சிக்கு ஆதரவாக இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது. பற்றாக்குறைக்கு, திமுக வேறு அதிமுக - பாஜக கூட்டணி பிளவு ஒரு நாடகம் என்றும், அவர்கள் விரைவில் இணைந்து விடுவார்கள் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறது.

 

 ஆகவே  இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரை தனக்கு சாதகமாக எடப்பாடி பயன்படுத்துகிறார் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

  இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதால் பாஜக மீது முஸ்லிம்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அது தனது முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் தாங்கள் இருப்பதை காட்டவும் முடியும் என்பது அந்த ஜீனியசில் கணக்காம்.