லவ்வர்ஸ் ஸ்பாட் எனப்படும் இடத்தில் மர்ம கொலை!

லவ்வர்ஸ் ஸ்பாட் எனப்படும் இடத்தில் மர்ம கொலை!

  ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர்  அடித்து கொலைபுதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து கொலை செய்யப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா, கதிர்மலை முருகன் ஆலயம் அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் அங்குள்ள பாறை மீது  கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

  கொலைசெய்யப்பட்ட அவரது உடலை 100 நாள் வேலை திட்ட குழியில் அரைகுறையாக புதைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற சிலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

  தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   பாறை மீது பதியப்பட்டுள்ள ரத்த கறைகளை சேகரித்து கொலை செய்யப்பட்டுள்ள நபர் யார் ?எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் இளைஞரை அடித்துக் கொலை செய்து விட்டு அரைகுறையாக புதைத்து விட்டு  தப்பி ஓடிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கள்ளக்காதல் ஜோடியினர் சுற்றுலா தளம் போல் சென்று வருவதும் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 மேலும் லவ்வர்ஸ் ஸ்பாட்டை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஓர் பணிகள் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அப்பகுதி மக்கள் வைக்கின்றனர்.