வேலூர் மற்றும் திருப்பத்தூரில் பயங்கர நில நடுக்கம் !மக்கள் அச்சம்!!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
வேலூர்மாவட்டம்,மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் அச்சமடைந்தனர். ஒடுக்கத்தூர் ,பள்ளிகொண்டா,குடியாத்தம்,பேர்ணாம்பட்டு,போன்ற இடங்களிலும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளிலும் காலை 7.35 மணி முதல் 7.42 மணி வரையில் லேசான நில அதிர்வு மற்றும் டமார் என சத்தமும் ஏற்பட்டது.
இதனை மக்கள் நன்கு உணர்ந்தனர். இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் பெரியதாக ஏற்படவில்லை இருப்பினும் சத்தத்துடன் லேசான அசைவையும் மக்கள் உணர்ந்தனர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போல நில அதிர்வு பேர்ணாம்பட்டு பகுதியில் ஏற்பட்டு மத்திய புவியியல் துறையினர் வந்து ஆய்வும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது