தற்காலிக இரசாயன உர பயன்பாடு தொடர்கதை ஆகிவிட்டதே! நறுவீ நிறுவனர் ஜி.வி.சம்பத் வருத்தம்!

தற்காலிக இரசாயன உர பயன்பாடு தொடர்கதை ஆகிவிட்டதே! நறுவீ நிறுவனர் ஜி.வி.சம்பத் வருத்தம்!

ம.பா.கெஜராஜ்,

    தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் 2 - நாள் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா - வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்தார்.

  ஆற்காடு அடுத்த தக்காங்குளம் இயற்கை வழி வேளாண் பண்ணையில் தொண்டை மண்டல விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா 2 - நாள் நடைபெறுகிறது.

   இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியை வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் அரிசி மற்றும் விதைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

 இது பற்றின விவரம் வருமாறு,

உடல் நலத்திற்கு உகந்த உணவு உற்பத்தி அதிலும் இயற்கை உணவு உற்பத்தி , பாரம்பரிய உணவு உற்பத்தியை விவசாயிகளுக்கு பறை சாற்றும் வகையில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது . அதன் மூலம் பாரம்பரிய நெல் உற்பத்தி , வீரிய விதை உற்பத்தி , பூச்சிக் கொல்லி பயன்படுத்தும் முறை , தென்னை , காய் கனி உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா 2018 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு , ஆண்டு தோரும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

  அதன்படி தற்போது ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா -2022 , இரண்டு நாள் நடைபெறுகிறது . ஆற்காடு தக்காங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கே.எம் . இயற்கை வழி வேளாண் பண்ணையில் நடைபெறும் இத்திருவிழாவை யொட்டி நெல் , கரும்பு , தென்னை , கம்பு , சோளம் , காய் கனி , இயற்கை உரங்கள் , உழவுக் கருவிகள் , உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் , பாரம்பரிய வேளாண் உற்பத்தி உள்ளிட்ட 120 - க்கும் மேற்பட்ட அரங்குகள் அடங்கிய வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

  கண்காட்சி மற்றும் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா தொடக்க விழாவிற்கு ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல தலைவர் டாக்டர் ஜெ . இலட்சுமணன் தலைமை வகித்தார் . கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் விமல் ஜி . நந்தகுமார் , கே.எம் . இயற்கை வழி வேளாண் பண்ணை நிறுவனர் கே.எம் . சாமுண்டீஸ்வரி ஆகியோர் முன்னலை வகித்தனர் . நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எம் . பாலு வரவேற்றார் .

   விழாவில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வேளாண் கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகையில் :

 உலகில் முதன் முதலாக தோன்றிய மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மொழியும், பாரசீக மொழியும் ஆகும் . பாரசீக மொழி அழிந்துவிட்டது . ஆனால் , தமிழ் மொழி இன்றளவும் வழக்கத்தில் சிறந்து விளங்கி வருகிறது . தமிழ் மக்களின் முக்கிய அடையாளமே இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தி செய்வது . தமிழர்களின் அடையாளங்கள் தற்போது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது . அதில் ஒன்றுதான் பாரம்பரிய உணவு வழக்கம்.

   இப்போது , அந்த பாரம்பரிய உணவு உற்பத்தியை தொடங்கி உள்ளனர் . அதன் எதிரொலிதான் இந்த நிகழ்ச்சி . உலகத்திற்கே உணவு உற்பத்தி செய்து வழங்கி வந்தது நம் நாடு , ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு சென்ற பிறகு கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. பஞ்சம் ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றது . நாம் கடைபிடித்து வந்த இயற்கை முறை வேளாண்மைக்கு மாறாக வேளாண் உற்பத்தியில் 60,70 ஆண்டுகளாக அதிக உற்பத்திக்காக இராசயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

 அந்த நேரத்தில்தான் பசுமை புரட்சி ஏற்பட்டு ஐ.ஆர் . - 8 , ஐ.ஆர் -20 ரக நெல் உற்பத்தி நடைமுறைக்கு வந்தது . தற்காலிகமாக நடைமுறைக்கு வந்த இரசாயன உரங்கள் பயன்பாடு இன்று தொடர்கதை ஆகிவிட்டது.

   இதனால் , மனிதர்களுக்கு சக்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்ப்பட்டுவிட்டன . - அடுத்த தலைமுறையினருக்கு நாம் ஆரோக்கிய வாழ்வு கொடுக்க வேண்டும் , இதற்கு இயற்கை முறை உணவு அவசியம் . உடல் பாதிப்பு இல்லாத வகையில் இராசயன உரங்களை தவிர்த்து இயற்கை உரம் பயன்படுத்தும் நிலை வரவேண்டும் . அது பற்றி இந்த திருவிழாவில் வேளாண் பெருமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    பாரம்பரிய இயற்கை முறை உணவு உற்பத்தி மற்றும் விளை பொருட்களுக்கான உரிய விலை கிடைப்பது ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . வேளாண்மை உற்பத்தியில் நல்ல தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் , அந்த தரமான விதைகள் உற்பத்தியில் வேளாண் மக்கள் ஈடுபட வேண்டும் . இது போன்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஆங்காங்கே நடத்த வேண்டும் 

  நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி மைய பயிற்றுனர் முன்னோடி விவசாயி டி . நவநீதகிருஷ்ணன் , சென்னை மண் வாசனை அமைப்பின் பிரதிநிதி மேனகா , இயற்கை விவசாய அமைப்பின் கீதா பிரியதர்ஷினி , பாரம்பரிய விதைகள் சேகரிப்பாளர் பிரியா , வெல்லூர் கிச்சன் ஹோட்டல் உரிமையாளர் கே.ஜி. புண்ணியகோட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.