மேயர் பிரியாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

உ.சசிகுமார்,
சென்னை மாநகர மேயர் பிரியாவை பொது மக்கள் முற்றுகையிட்டு கடும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ப்ரியா மக்களை சமாதானப்படுத்த படாதபாடுபட்டார்.
கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப் புறமாவட்டங்களில் தாழ்வான பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை நின்ற பிறகும் நீர் அகற்றப்படாததால் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் அவதிய டைந்து வருகின்றனர். இதனால், மீட்பு பணிக்காக செல்லும் மக்கள் பிரதிநிதிகளுடன் பொதுமக்கள் ஆங்காங்கே தகறாறு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெரம்பூரின் 71-வது வார்டு கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளுவர் தெரு, காந்திபுரம், அம்பேத்கர் தெரு, பனைமரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக மின்சாரம் வழங்கப் படவில்லை. குடிநீரும் வழங்கப்படவில்லை.
அப்படியே மாநகராட்சி சார்பில் விநியோகிக் கப்படும் நீரில்கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் நேற்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற மேயர்பிரியாவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், அடிப் படை வசதிகளை வழங்குமாறு முற்றுகையிட்ட மக்களிடம், ''இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்படும். நான் உங்கள் பகுதியில் வாழும் பெண், இவற்றையெல்லாம் உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று சமாளித்தார்.