மண்டல கல்லூரி கல்வி இயக்குனரை கல்லூரி மாணவ மாணவிகள் சிறைபிடித்து போராட்டம்!

க.பாலகுரு,
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் உத்தரவு வழங்க வந்த தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குனரை கல்லூரி மாணவ மாணவிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு எதிராகவும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி கல்லூரி கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இயக்குனர் தனராஜன் கல்லூரி முதல்வர் கீதாவை 17 (e) பிரிவில் பணி நீக்கம் செய்து உத்தரவை கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் கீதாவிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கல்லூரியை விட்டு வாகனத்தில் புறப்பட்டபோது கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் வாகனத்தை சிறை பிடித்தனர் .
இது குறித்த தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் கல்லூரி முதல்வர் கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர் .
இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது .