வில்லங்கத்துடன் விளையாடும் மாநகராட்சி அதிகாரிகள்!

ஆர்.மதன்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 60 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் பணிபுரிவர்களோ மாநகராட்சியில் சுமார் 2060 பேர் அரசாங்கம் சம்பளம் பெற்றுக் கொண்டு உள்ளனர். நான்கு மண்டலம் கொண்ட வேலூர் மாநகராட்சி நான்கு மண்டல தலைவர் பொறியாளர் சுகாதார அலுவலர்கள் என்று ஒரு மண்டலத்திற்கு சுமார் 150 பேர் பணிபுரிகிறார்கள்.
இது போதாது என்று தினக் கூலியாக 200 பேர் கொண்ட வேலூர் மாநகராட்சி சென்னை மாநகராட்சி, அடுத்த ஒரு பெரிய மாநகராட்சி என்ற பெருமையும் பெற்று உள்ளது.
தற்போது இங்கு, மக்கள் பிரச்சனையும், மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சனையும் தலைவிரித்து ஆடுகிறது.
காரணம் சுகாதார அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் என்கிறார்கள்.
இவர்கள் அதிகார பார்வையில் உள்ள அறுபது வார்டுகளில் இன்னும் கூட செயல்பட வேண்டிய திட்டங்கள் கிடப்பில் உள்ளதாம்.
கணிசமான தொகையை கிடைத்தால் மட்டுமே பணிகள் நகர்கிறதாம்.
வேலை நாட்களில் வேலை செய்வதில்லை மக்களுடைய பிரச்சனையை தீர்ப்பது இல்லை அத்தியாவசியமான மக்களுடைய பிரச்சனைகளை முன் இருந்து பார்ப்பதும் இல்லை.
உதாரணத்திற்கு கால்வாய்க்கள், தன் பாக்கெட் நிரம்பினால் போதும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கும் இவர்கள் இப்படி இருந்தால் மக்கள் பாடு கஷ்டம் தான்.
தமிழக முதல்வர் இப்படிப்பட்ட நபர்களை களை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மூன்றாம் மண்டலம் மற்றும் நான்காம் மண்டலங்களில் பணியாற்றும் சில முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் அளவுக்கு குவிந்து கிடக்கிறதாம்.