அடுத்த டிஜிபி யார்? சங்கர் ஜிவால் விஸ்வநாதன் ரவி பெயர்கள் பேச்சு!

அடுத்த டிஜிபி யார்? சங்கர் ஜிவால் விஸ்வநாதன் ரவி பெயர்கள் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 இந்த மாத இறுதியுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதை அறிவோம்.  இந்நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 இந்நிலையில் அடுத்த டிஜிபி ஆகும் யோகம், மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.

 ஆனால் சங்கர் ஜிவாலுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 அப்படி சங்கர் ஜிவால் டிஜிபியாக பொறுப்பேற்கும் பட்சத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி காலியாகும். எனவே அடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் ரேஸிலும் பல முக்கிய ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளனர்.

 உளவுத்துறை டிஜிபியான தேவாசீர்வாதம் தான் சென்னை கமிஷனராக வருவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கும் போட்டிகள் உள்ளதாம்.

 அந்த வகையில், தற்போது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர், தீயணைப்புத் துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோர் பெயர்கள் பேசப்படுகிறதாம்.

  இவர்கள் இருவரில் சந்தீப்ராய் ரத்தோருக்கு முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினருக்கு ஆதரவு இருக்கிறதாம். அதே சமயத்தில், ஆபாஷ் குமாரை சென்னை கமிஷனர் பதவியில் அமர்த்த திமுக சீனியர் அமைச்சர்கள் சிலர் ரெக்கமண்ட் செய்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

  இந்த ஆபாஷ் குமார் தான், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த டீமுக்கு தலைமை வகித்தவர் என்பதையும் அமைச்சர்களில் சிலர் சுட்டிக்காட்டுவதாக தகவல்.

  ஆக டிஜிபி மற்றும் கமிஷனர் பதவிகளுக்கான ரேஸ் துவங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.