தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கோழி இறைச்சி கழிவு! பொதுமக்கள் அவதி!

தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கோழி இறைச்சி கழிவு! பொதுமக்கள் அவதி!

கு.அசோக்,

 சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கோழி இறைச்சி கழிவு மற்றும் குடியிருப்பு குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் துர்நாற்றம் வீசப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குடியிருப்பு குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

  ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் குப்பைகள் மூட்டை மூட்டைகளாக கொட்டப்பட்டு இருப்பதன் காரணமாக அப்பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசப்பட்டு சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் சாலையில் பயணம் செய்வோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

 எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டு இருக்கும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.