சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 ஜே.சி.பி பறிமுதல்!

சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 ஜே.சி.பி பறிமுதல்!

 கு.அசோக்,

 அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் செங்கல் சூளைக்கு சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 ஜேசிபி இயந்திரங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து கிராமிய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் செங்கல் சூளைக்கு ஜேசிபி இயந்திரங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவுக்கு தொடர்ந்து புகார் சென்றது.

 அதன் பேரில் அரக்கோணம் வட்டாட்சியர் செல்வி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

 அப்போது ஜேசிபி இயந்திர ஓட்டுநர்கள் 2 பேர் தப்பி ஓடினர். வருவாய்த் துறையினர் விசாரணையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியின்றி அதிக அளவு மண் செங்கல் சூளைக்கு திருடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு வருவாய் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

 கிராமிய காவல்துறையினர் உதவியுடன் அங்கிருந்து இரண்டு ஜேசிபியை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜே.சி.பி உரிமையாளரை தேடி வருகின்றனர்.