தாபாவில் தாக்கப்பட்ட பாஜக மா.செ! மூவரை கைது செய்த போலிஸ்!

தாபாவில் தாக்கப்பட்ட பாஜக மா.செ! மூவரை கைது செய்த போலிஸ்!

 ஜி.கே.சேகரன்,

  தாபா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம்  என கோஷமிட்ட  பாஜக மாவட்ட செயலாளரை மூன்று இளைஞர்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்களை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நடத்த வரும் நிலையில், அண்ணாமலையை வரவேற்க வேலூர் மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

   அதன்படி ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள தாபா அருகே வரவேற்பு பேனர் வைக்க வேலூர் மாவட்ட பாஜக செயலாளர் லோகேஷ் குமார் என்பவர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

  பின்னர் தாபாவில் உணவு அருந்திய லோகேஷ் குமார் மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் சிலர், திடீரென ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டுள்ளனர், அப்பொழுது அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த வேலூர் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில், வசீம், பாபு ஆகிய மூன்று இளைஞர்களும் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  இதனால் இருதரப்பினருக்குமிடையே வாய்தகராறு, ஏற்பட்டுள்ளது.

 இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மூன்று பேரும் பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் அவருடன் வந்த பாஜக நிர்வாகியை சரமாரியாக தாக்கினா. இதில் லோகேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு லோகேஷ்குமாரை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த மூன்று இளைஞர்களையும் தேடி வந்தனர்.

 இந்நிலையில், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமாரை தாக்கிய இஸ்மாயில், வசீம், பாபு ஆகிய மூன்று பேரையும்,கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து  ஆம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.