புகார்தாரர்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்!வேலூரில் புதிய எஸ்பி பேட்டி!
!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள் கஞ்சா கள்ளச்சாராயத்தை ஒழிக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும் - புகார் அளிக்க வரும் மக்களிடம் காவல்துறை கணிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என-புதியதாக பதவி ஏற்றுகொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பேட்டி.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று பதவி ஏற்றுகொண்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், ரவுடிகள் ஒடுக்கபடுவார்கள். குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபடும்.
மேலும் கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.
காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புகார் அளிக்க வரும் மக்களிடம் கணிவுடன் நடந்து அவர்களின் குறைகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோயம்புத்தூரில் நான் பணியாற்றியபோது அங்குஎடுத்தநடவடிக்கை போலவே இங்கு செயல்படுத்தஉள்ளேன் என்று சொன்னார்.