பட்டியலின மக்கள் பகுதியை ஓரம் கட்டும் தலைவர்!

டி.முகமது,
பேரணாம்பட்டு மசிகம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாயை தூர் வாரவும் இல்லை, தடுத்து சுவரும் கட்டி கொடுக்கவில்லை, இதனால் கழிவு நீர் வீதிகளில் செல்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாயை தூர் வாரவும் இல்லை, தடுத்து சுவரும் கட்டி கொடுக்கவில்லை, இதனால் கழிவு நீர் வீதிகளில் செல்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மலேரியா, டைபாய்டு கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நலனை கருதி சமுக சமத்துவ படை கட்சியின் மாவட்ட செயலாளர் பொன். குணசீலன் எக்ஸ். எம். சி .அவர் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பிடிஓ) மனு கொடுத்தும் இதுவரையும் எந்த ஒரு செயல்பாடும் இல்லை.
ஆகவே வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இது குறித்தும் மற்றும் மசிகம் கிராமத்தில் உள்ள குறைகளை சீர்படுத்த கோரியும் மனு கொடுத்துளனர்.
இது சம்பந்தமாக மசிகம் கிராமத்தில் வசித்து வரும் பஞ்சாயத்து தலைவர் ஆர். தியாகராஜன் அவர் வேறு வகுப்பைச் சார்ந்தவர் அவர் சேரி என்றாலே கேலி கிண்டலாக இளக்காரமாக பேசுவதாக கூறப்படுகிறது.
அந்த உள்நோக்கோடுதான் மசிகம் கிராம காலணி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் தூர் எடுப்பதில்லை கால்வாய் சுத்தம் செய்வதில்லை எந்த ஒரு செயல்பாடுகளையும் செய்வதில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் மன வேதனையோடு கூறுகிறார்கள். எங்கள் ஊருக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று அந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.