கட்டையால் பெண்ணை தாக்கிய பதற வைக்கும் சம்பவம்!

ஜி.கே.சேகரன்.

நான்கு சென்ட் நில பிரச்சனையில் கட்டையால் பெண்ணை தாக்கும் பதற வைக்கும் சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் நடந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு எல்லாப்பிள்ளையார் வட்டம் பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் பெருமாள் இருவரும் அண்ணன் தம்பிகள். சின்னபிள்ளையின் மகளான செவத்தம்மாளுக்கும் பெருமாள் மகனான குமாருக்கும் இடையே 4 சென்ட் அளவிலான நில தகராறு பல வருடங்களாக இருந்து வந்துள்ளது.

   இந்த நிலையில் செவத்தம்மாள் பிரச்சனையில் உள்ள அந்த நாலு சென்ட் நிலத்தை ஏர் உழ டிராக்டரை அழைத்துது வந்துள்ளார்.   அப்போது குமார் அந்த நான்கு சென்ட் நிலம் என் பெயரில் உள்ளது அதை முறையாக அளந்து கொடுத்துவிட்டு நிலத்தை உழவு செய்யுங்கள் என கூறியதாக தெரிகிறது.

 இதனால் அவர்களுக்குள்  ஏற்பட்ட தகராறு கைகலப்பாத மாறியது. அப்போது செவத்தம்மாள் தரப்பில் தாக்கியதில்  குமாரின் மனைவி விஜயா காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

 இதனால் ஆத்திரம் அடைந்த விஜயாவின் தம்பியான ரமேஷ் செவத்தம்மாளை கட்டையால் சரா மாறியாக தாக்கியுள்ளார். பின்னர் நிலைகுலைந்த செவத்தம்மாள் மயங்கி விழுந்தார்.

 இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 அப்படியிருக்க காயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் செவத்தம்மாளை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கும் விஜயாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

   இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் குமார் மற்றும் ரமேஷ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நான்கு சென்ட்  நிலப் பிரச்சனை காரணமாக உறவினர்களே ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.