210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த டி.ஐஜி!

210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த டி.ஐஜி!

 ஜி.கே.சேகரன்,

 வேலூரில் சுமார் ரூ.40. லட்சம் மதிப்பிலான 210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் டி.ஐஜி ஒப்படைத்தார்.

  வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரசு காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S.முத்துசாமி இ.கா.ப. அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., ஆகியோர்கள் இணைந்து தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க Cell Tracker என்ற Google Form-ஐ வேலூர் மாவட்ட பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தினார்கள்.

Cell Tracker -ல் 9486214166 என்ற WhatsAppஎண்ணிற்கு HI என்ற Message அனுப்பி தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன் தொடர்பாக புகார் அளிக்கலாம். என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 03.07.2023-ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவுசெய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 162 செல்போன்கள் 21.07.2023-ம் தேதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் துரித நடவடிக்கையின் மூலம் 10.10.2023-ம் தேதி இரண்டாம் கட்டமாக சுமார் 40,47,000 நாற்பது லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம்) ரூபாய் மதிப்புடைய 210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

   இதுவரை மொத்தம் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர் .

   பின்னர் டி.ஐஜி முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துகொடுப்பதில் இம்மாவட்டம் முதன்மை வகிக்கிறது மேலும் கள்ளச்சாராயம் ஒழிப்பதிலும் தற்போது இம்மாவட்டம் மும்முரமாக இருந்து குறைத்துள்ளது. விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் காவல்நிலையங்களில் புகார் அளிக்கும் மக்கள் மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு தவறும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவுள்ளோம் பள்ளிகள் கல்லூரிகளின் முன் பான் பராக் குட்கா கூல் லிப் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதனை தடுத்து வருகிறோம் என்று கூறினார்.