வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ்! டெண்டர் கோரப்பட்டுள்ளது!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ள தகவலைப் பார்த்தால் எய்ம்ஸ் மருத்து வகல்லூரி இந்த முறையாவது தொடங்கும் என்று அறியமுடிகிறது.
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமையப்போவதாக ரொம்ப காலமாக குடுகுடுப்பை சொல்லிக்கொண்டிருந்த நிலையில்,
தற்போதைக்கு வாடகை கட்டிடத்தில் கல்லூரியை அமைக்க அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் அதற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு,100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.