போலீசை முதல்வரிடம் போட்டுக் கொடுப்பேன்! போதைப் பெண்ணின் ரகளை!
அருண் ஹென்றிக்ஸ்,
போதைப் பழக்கத்தை நாடிச் செல்லக்கூடாது என்று தமிழக அரசு தினமும் மீடியாக்களில் விளம்பரம் வெளியிட்டு வருகிறது.
ஆனாலும் கூட ஒரு சிலர் போதையை நாடி சென்று விடுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குடியாத்தத்தில் பெண் ஒருவர் குடித்துவிட்டு ரகளை செய்த செய்தியை “லைவ் லுக்” வாசகர்கள் வாசித்திருப்பீர்கள்.
இந்நிலையில் கரூரில் இன்னொறு குடிபோதை மங்கை போலீசாரை கலாய்த்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு, போலீசாரைப் பற்றி முதலமைச்சரிடம் முறையிடுவேன் என்று ரகளை செய்தார். ஆனால் போலீசார் அவரை மீட்டு பத்திரமாக அழைத்துச்சென்றனர்.
இது, மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். நம் தமிழகத்தில் பெண்கள் சிலர் இப்படி போதையின் பாதைக்கு தள்ளப்படுவதையும், கலாச்சாரம் மாறிப்போவதையும் தடுக்க சம்மந்தப்பட்டவர்கள் முற்பட வேண்டும்.