பாரம்பரிய கிழங்குகள் கண்காட்சி! ஆர்வமுடன் பார்த்த மக்கள்!

கு.அசோக்,
வேலூரில் பாரம்பரிய மரபு வழி காய்கறி கிழக்குகள் அரிசி விதைகள் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து பயனடைந்தனர்
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மரபு பாரம்பரிய காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவானது நடந்தது. இதில் பாரம்பரிய காய்கறிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பூசனிக்காய் ரகங்கள் மற்றும் சுரைக்காய் அவரைக்காய் வெண்டைக்காய் ரகங்கள் மற்றும் கத்திரிக்கைக்காய் தக்காளி மிளகாய் நூற்றுக்கணக்கான கிழக்கு வகைகள் பாரம்பரிய அரிசிகளான ரத்த சாலி.சிவனார் சம்பா, தூயமல்லி ,கருப்பு கவுனி உள்ளிட்ட நூற்றுகணக்கான பாரம்பரிய அரிசி மற்றும் நெல் வகைகள் மரவெண்டை மர அவரை ,கொத்தவரை பாகற்காய்,கத்திரிக்காய்,சுரைக்காய்,பீர்கங்காய் விதைகள் தேன் தினை அரிசி,மற்றும் மூலிகை இயற்கை சோப்புகள் இயற்கை சலவை சோப்புகள் உள்ளிட்டவைகளும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆயிரகணக்கான மக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான விதைகள் காய்கறிகள் அரிசி ரகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இரண்டாம் ஆண்டு இந்த கண்காட்சி நடக்கிறது. அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய காய்கறிகள் விதைகள் ஆகியவைகளை கொண்டு செல்லும் வகையில் இக்கண்காட்சி நடந்தது. 800 -க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் காய்கறிகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றது.