ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கால் 120 பள்ளிகள் மூடல்! மாணவச்செல்வங்கள் அவதி!

ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கால் 120 பள்ளிகள் மூடல்! மாணவச்செல்வங்கள் அவதி!

 கு.அசோக்,

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வேலூர் மாவட்டத்தில் 120 தொடக்கப்பள்ளி மூடப்பட்டுள்ளது ஆசிரியர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் ஜோசப் அன்னைய்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தினை மாவட்ட செயலாளர் குப்புராம் துவங்கி வைத்தார்.

  இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஜனார்த்தனன் உள்ளிட்ட பல சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசாணை 243 ரத்து செய்யவும், ஊதிய முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தினை முழுமையாக கைவிட வேண்டும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

  ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்

 இதன் காரணமாக  வேலூர்மாவட்டத்தில் 120 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்வி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவச்செல்வங்கள் அவதிப்பட்டனர்.