சோதனை சாவடியில் சிக்கிய 4 டன் ரேஷன் அரிசி! 3பேர் கைது!!

சோதனை சாவடியில் சிக்கிய 4 டன் ரேஷன் அரிசி! 3பேர் கைது!!

கு.அசோக்,

 பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3-பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி.கோட்டா செல்லும் சாலை, பத்தலப்பள்ளி மலை கிராமம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனை சாவுடி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மாநில எல்லை பகுதியாகும். 

 இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திரா மாநிலம் வி.கோட்டா கர்நாடகா மாநிலம் கேஜிஎப்,கோலார், பெங்களூர்,போன்ற மாநிலங்களுக்கு சென்று வரமுடியும்.

 அப்படியிருக்க இந்த சோதனை சாவடிகள் வழியாக நாள் தோறும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

 இந்நிலையில் நேற்று பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் பிரபு, ஜோதி, ஜமுனா ஆலிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

 அப்போது கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கூன்டு வண்டியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அதில்  சுமார் 4 டன் எடை கொண்ட ரேஷன் அரிசிகள் மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட்டது.

  அதனை பறிமுதல் செய்த போலீசா£,¢  ஓட்டுனரான பெங்களூர் பகுதியைச் சேர்ந்த வருன் வயது 21 அவர் உடன் இருந்த பெங்களூரை சேர்ந்த விஜய் வயது 21,சரண் வயது 21 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் ராணியிடம் ஒப்படைத்துள்ளனர்.

  பின்பு குடிமைப் பொருள் இன்ஸ்பெக்டர் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசிகளை குடியாத்தம் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.