தூக்கிவீசப்பட்ட கணவன் மனைவி! எருதுகட்டுக்கு சென்ற வேன் மோதி விபத்து!

தூக்கிவீசப்பட்ட கணவன் மனைவி! எருதுகட்டுக்கு சென்ற வேன் மோதி விபத்து!

  ஜி.கே.சேகரன்,

 எருது விடும் போட்டியில் கலந்துக் கொள்ள, மாட்டை பிக்கப்வேனில் ஏற்றிச் சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (50). இவருடைய மனைவி பழனியம்மாள் (45). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில்  வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு இறைச்சி வாங்க வந்துள்ளனர்.

 அப்போது அன்னேரி அருகே உள்ள ஆண்டி வட்டம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பிக்கப் வாகனம் மோதியது.

 ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் செங்கத்திற்கு எருது விடும் திருவிழாவிற்குகாக மாட்டை அந்த  பிக்கப் வேணில் ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்..

சிவநாதன் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் இந்த அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.