கிணற்றில் விழுந்த காளை மாடு! சூப்பராக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஜெல்லியூர் என்கிற கிராமத்தில் உள்ள 50 அடி கிணற்றில் காளை மாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அந்த காளையை கயிறுகட்டி மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சொந்தமாக காளை மாடு வளர்த்து வருகிறார்.
அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி ஆழ கிணறு உள்ளது. அந்த கிணற்றின் அருகே உள்ள நிலத்தில் அவரது காளைமாடு மேய்ந்துக்கொண்டிருந்தது.
அப்போது அந்த காளை திடீரென கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்தார்.
தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தசரதன் தலைமையில் கேசவன்,கணபதி, சிவனேசன், ஆகிய தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்த காளை மாட்டை பத்திரமாக மீட்டனர்.
இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.