அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவாலிபர் வாலிபர்!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவாலிபர் வாலிபர்!

ஜி.கே.சேகரன்,

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆரிப் நகர் பகுதியைச் சார்ந்த சவூகத்அலிகான் மகன் சாதிக் அலி(24).

 இவர் தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றிருந்தார். அப்படியிருக்க, சேலம் கோட்டம் உட்பட்ட அரசு போக்குவரத்து பேருந்தை கிருஷ்ணகிரியில் இயக்கி வந்த  ஓட்டுநர் பெரியசாமி திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 அப்போது கசிநாயக்கம்பட்டி பகுதியில் சாதிக் அலி மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் நேர் எதிரே வரும் பொழுது அரசு ஓட்டுனரை சாதிக் ஆபாச வார்த்தையால் திட்டியது போல் தெரிகிறது.

  அதன் காரணமாக வாய்த்தகராறு அதிகமாக சாதிக் தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அரசு பேருந்து வண்டி என்னை குறிப்பிட்டு திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது அதனை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

  அதன்பின் சாதிக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே வண்டியை நிறுத்திய பின் அரசு பேருந்து ஓட்டுனர் பெரியசாமியை சரமாரியாக அடித்து உதைத்துதாக தெரிகிறது.

  அதன் பேரில் பேருந்து ஓட்டுனர் பெரியசாமி பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

 இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளர் அகிலன் போக்குவரத்து இடையூராக இருந்த பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தார்.பின்னர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.