பயனற்று கிடக்கும் வாரசந்தை கட்டிடம்! குடிக்க பயன்படும் அவலம்!

பயனற்று கிடக்கும் வாரசந்தை கட்டிடம்! குடிக்க பயன்படும் அவலம்!

  கு.அசோக்,

 சோளிங்கர் அருகே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில்  பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வாரச்சந்தையை திறக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை.

 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்காபுதுக்குடியானூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு விவசாயிகள், பொதுமக்கள் பயண்படும் 35 கடைகள் கடைகள்   கட்டப்பட்டது.

  இவை கட்டிமுடிக்கப்பட்டு இரணடு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயண்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஆகவே தற்போது வாரச்சந்தை தரை புல், பூண்டு  முளைத்து புதர் மண்டி கிடக்கிறது.

   மேலும், இரவு நேரங்களில் குடிமக்களின் கூடாரமாகவும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே உடனடியாக வாரச்சந்தை கட்டிடத்தை பயண்பாட்டிற்க்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.