மாப்பிள்ளையிடம் செல் போனை பறித்த காஞ்சி பூஜாரிகள்!தாதாயிசம் என்று பக்தர்கள் புலம்பல்!

தாம்பரம்.முரளிதரன்,
ஆண்டவனுக்கும் ஆண்மீகவாதிகளுக்கும் இடையே பூஜை புனஸ்கரம் செய்கிறோம் பேர்வழி என்று திணுசு திணுசாக பலர் உள்ளனர். இடைதரகர்களான இவர்களுக்கு இதுல சாதி வேறு? அதற்கு சில அதிகாரங்களையும் வைத்திருக்கிறார்கள்.
அந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு இடைத்தரகர்கள் செய்யும் அட்டகாசம் சொல்லி மாளாது. ஆண்டவர் சந்நிதானத்தில் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில் தொடங்கி கோவிலுக்குள் நாகரீகமாக வருபவர்களை டார்ச்சர் செய்வது வரைக்கும் தாதாயிஸம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி நடந்ததாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கூறிய தகவலை இங்கு முன்வைக்கிறோம்.
சார் மனசு சங்கடத்துடன் இதை உங்களிடம் சொல்கிறேன். கடந்த 22.08.2022 ஆம் தேதி திங்கள் கிழமையன்று காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றோம். அப்போது மாலை சுமார் ஐந்து மணி இருக்கும், அப்போது அங்கு நடந்த சம்பவத்தை பார்த்து வேதனைஅடைந்தோம்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இருதரப்பினர், முகூர்த்த சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரம் வந்துள்ளனர். அங்கு பலமணி நேரம் அலசி நல்ல புடவையை தேர்வு செய்தனர்.
இதனால் மகிழ்ந்த அவர்கள், தங்கள் குடும்பங்கள் சகிதமாக காஞ்சி காமாட்சியம்மன் மடியில் புடவையை வைத்து அர்சனை செய்ய திட்டமிட்டனர்.
அதற்கென்ன பேஷா போகலாம் என்று மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் உற்றார் உறவினர் சகிதம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார்கள்.
கல்யாண புடவையை அர்ச்சனை செய்ய ஆயத்தம் ஆன போது, அங்கிருந்த பூஜாரி தட்சனை கேட்டார். அதுபும் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
அதை சம்மந்தப்பட்டவர்கள் கொடுக்கவில்லை என்பதற்காக பூஜாரியும், அவருடன் இருந்த சுமார் 25 வயதுடைய நபர் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஒன்று கூடி கூச்சல் போட்டனர். ஏன் செல்போனில் படம் எடுத்தாய் என பொய் குற்றச்சாட்டை கூறி, மாப்பிள்ளை பையனிடமிருந்த 1,00,000/-ரூபாய் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.
பின்னர் இரவு 8 மணிவரை அலைக்கழித்து ரூபாய் 2000/- வாங்கிக்கொண்டு போனை திருப்பிக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
சுப முகூர்த்த தினத்தை மையப்படுத்தி அங்கு வந்தவர்களை பூஜாரிகள் மனக்கஷ்டப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதைக்கண்ட சக பக்தர்கள் மற்றும் கடைவியாபாரிகள் முகம் சுளித்தனரே தவிர? அந்த தாதாயிஸம் செய்த பூஜாரிகளை நியாயம் கோர இயலவில்லை.
இதெல்லாம் இந்த கோவிலை நிர்வகிப்பவர்களுக்கு தெரிவித்தால் ஒழிய இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காஞ்சிபுரத்திலுள்ள சில சமூக ஆர்வலர்களிடம் பேசிய போது, இதுபோல அவ்வப்பொழுது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சங்கதிகள் உளவுத்துறைக்கு நல்லாவே தெரியும் என்ன செய்வது அவர்கள் கைகட்டி சேவம் செய்து அரசுக்கு என்பதை மறந்துவிட்டு இது பற்றியெல்லாம் அறிக்கை சமர்ப்பிப்பதில்லை.
எது எப்படியானாலும் மேற்படி தினத்தில் பூஜாரிகளிடம் வசைபாடு பெற்ற மாப்பிள்ளை மற்றும் பெண் ஆகியோருக்கும், அந்த இரு வீட்டாருக்கும் காஞ்சி காமாட்சியம்மனின் ஆசி கண்டிப்பாக இருக்கும். அவர்கள் நீடுழி வாழ்வார்கள் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை கொஞ்சம் இப்படி திரும்பிப்பார்க்க வேண்டும்.