80,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி:- இலக்கு வைத்த வேலூர் ஆட்சியர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
23.10.2021 சனிக்கிழமை அன்று 1000 முகாம்களின் வாயிலாக 80,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேலூர் ஆட்சியர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இலக்கினை நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசு துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருதி முழு அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்புசி செலுத்திக் கொண்டு பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்சியர் இது குறித்து தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், நோய்த்தொற்று ஏற்படும் பட்சத்தில் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிகள் செலுத்தாதவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் போது பாதிப்புகள் அதிகமாகி சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டினை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகவும், தமிழகத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாகவும் உருவாக்கிட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.