கட்சியை கலைக்கப் போகிறாரா ஜெகன் மோகன் ரெட்டி! டி.கே.எஸி.டம் பெங்களூருவில் பேச்சு வார்த்தை!

கட்சியை கலைக்கப் போகிறாரா ஜெகன் மோகன் ரெட்டி! டி.கே.எஸி.டம் பெங்களூருவில் பேச்சு வார்த்தை!

 வி.டி.வித்யாசாகர்,

  ஆந்திர காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கும் தங்கை ஷர்மிளாவை நீக்கிவிட்டு தன்னை மாநில தலைவராக்கினால் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸிஸ் இணைய தயார் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

 இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசிவருவதாக கூறப்படுகிறது.

 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மேலும், 25 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றது. 

 அதே நேரத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 இடங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.  இதற்கு ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிலாவே காரணம்.

  ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள அவர் அண்ணனுக்கு எதிராக பல குற்றச்சாடுகளை முன் வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.

 அப்படியிருக்க ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்எல்ஏக்களில் சிலர் மாற்று கட்சிக்கு தாவ தயாராக இருப்பதாகக் பரபரப்பாக பேசப்படுகிறது.

 இது ஒருபக்கம் இருக்க ஜெகன் மீதான சொத்து குவிப்பு வழக் வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் சிறை செல்ல நேரிடும். 7 ஆண்டுகள் வரைதேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் அஞ்சுகிறார்.

 இதிலிருந்து தப்பவே  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் ஜோதியாகிவிட அவர் திட்டமிட்டிருக்கிறார்.

 ஏற்கனவே ஜெகனின் குடும்பத்தினர் முழுவதும் காங்கிரஸ்காரர்கள். இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2 முறை ஆந்திர காங்கிரஸ் முதல்வராக பதவி வகித்தார்.இவரது மறைவுக்கு பிறகுதான் ஜெகனுக்கும் சோனியா காந்திக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. இதன் காரணமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஜெகன் தொடங்கினார்.

  அண்மையில் ஜெகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரது தாய் விஜயலட்சுமி, தங்கை ஷர்மிளா தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கிய ஷர்மிளா, அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.

 மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் ஜெகனுக்கு எதிராக ஷர்மிளா செய்த தீவிர பிரச்சாரத்தால் ஜெகனுக்கு அவப்பெயர்ஏற்பட்டது.

  இந்த சூழலில் கட்சியை கலைப்பதை தவிர ஜெகனுக்கு வேறு வழியில்லை. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் உள்ள தனது 'லோட்டஸ் பேலஸில்' தங்கியுள்ள அவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

 இதையறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆடிப்போயிருக்கிறார்கள். தலைமையே இப்படி தாவ நினைத்தால் எங்கள் கதி என்ன ஆவது என்று கலங்கி நிற்கிறார்கள்.

 என்ன செய்வது தம் நலன் முக்கியமாச்சே?