பாக்- உடனான போர் வெற்றி..... ரபேல் நிறுவன பங்கின் விலை கிடுகிடு உயர்வு!

பாக்- உடனான போர் வெற்றி..... ரபேல் நிறுவன பங்கின் விலை கிடுகிடு உயர்வு!

 ம.பா.கெஜராஜ்,

பாக்கை வீழ்த்திய சிந்தூர் ஆபரேஷனுக்கு பின்னர் ரபேல் நிறுவன பங்குகள் குறைந்ததாகவும், சீன நாட்டு தயாரிப்பின் பங்குகள் எகிறியதாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் வெளியாயின.

 ஆனால் அதில் உண்மையில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரான்சின் ரபேல் போர் விமானங்களும் முக்கிய பங்கு வகித்தன.

  இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான லட்சுமண ரேகையைத் தாண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

 அப்படியிருக்க பாரிஸ் பங்குச் சந்தையில் ரபேல் விமானங்களை தயாரிக்கும் பிரான்சின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவன பங்குகள் விலை 2-வது நாளாக நேற்றும் உயர்ந்தன. வர்த்தகத்தின் இடையே ஒரு பங்கின் விலை 1.5% உயர்ந்து 305 யூரோவாக இருந்தது.

  கடந்த ஓராண்டில் இந்த பங்கு 43% உயர்ந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்படக்கூடியது ஆகும்.