ஸ்டேட் பாக்சிங் தொடக்கம்!

ஸ்டேட் பாக்சிங் தொடக்கம்!

கு.அசோக்,

  மாநில அளவிலான குத்துசண்டை போட்டிகள் 250 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு முதல் நாள் போட்டிகள் நடைபெற்றது

  வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் தமிழ்நாடு மாநில குத்து சண்டை சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் குத்து சண்டை சங்கம் சார்பில் துவங்கியது.

  இதனை தடகள சங்க செயலாளர் இளங்கோ துவங்கி வைத்தார். மாநில குத்து சண்டை சங்க பொதுசெயலாளர்  பிரித்திவிராஜ் தலைமையில் நடந்த இந்த போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து 250 வீரர் வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போட்டியானது நாளை 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.