இந்த ஆண்டே மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும்- அமைச்சர் துரைமுருகன் தகவல்!

இந்த ஆண்டே மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும்- அமைச்சர் துரைமுருகன் தகவல்!

ஜி.கே.சேகரன்,

 தமிழ்நாட்டில் பெரிய அளவில் விளையாட்டு மைதனாம் காட்பாடி அமைக்கப்படவுள்ளது  - டிசம்பருக்குள் நகராட்சி மாநகராட்சி தேர்தல் நடத்தபடும்   ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேச்சு

  வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறையின் அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

 பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், எல்லா கிராமத்துக்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். இந்த ஆண்டு காட்பாடியில் அரசு கல்லூரி கொண்டுவந்துள்ளேன். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்க முதற்கட்டமாக 100 படுக்கைகளுடன் துவங்கபடும்.

  தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானம் பெரிய அளவில் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

  நான் கொண்டு வரும் திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் இந்த பஞ்சாயத்து தலைவர்கள்.

   முதலமைச்சர் நூறு நாட்களுக்கு சொன்னதை செய்தார்.

   வீடுகளுக்கு 2 ஆயிரம் கொடுத்தோம், நகைகடனை தள்ளுபடி செய்தோம், நீங்கள் என் கையில் உள்ள வாளாக போர்வாளாக இருப்பவர்கள்.

   ஆகவே அந்த வகையில் நான் செய்யும் காரியங்கள் மக்களுக்கு கிடைக்க வாக்களிக்க வேண்டும். டிசம்பருக்குள் நகராட்சி மாநகராட்சி தேர்தல் வரும் என்று பேசினார்.