பதவி போயிடுமே?  அண்ணன் யாரை பார்த்து செல்கிறார்?!தர்மபுரி திமுகவில் திக் திக்!

பதவி போயிடுமே?  அண்ணன் யாரை பார்த்து செல்கிறார்?!தர்மபுரி திமுகவில் திக் திக்!

 த.லுக்காஸ்,

   தருமபுரி திமுகவில் அமைப்பு ரீதியாக மேற்கு, கிழக்கு இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் உள்ளனர். மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இன்பசேகரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.

 2016 தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த இன்பசேகரனுக்கு பென்னாகரம் தொகுதிலும், கிழக்கு மாவட்டபொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு தருமபுரி தொகுதியிலும் 2021 தேர்தலில் திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது ஆனால் இரு தொகுதிகளையும் அவர்கள் கோட்டை விட்டதோடு, ஒட்டுமொத்த தருமபுரியில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் குப்புறக்கவிழ்ந்தனர்.

 தருமபுரியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சரிவர தேர்தல் பணி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இதனால், இரு பொறுப்பாளர்கள் மீது தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.

 இதனால், இருவரையும் நம்பாமல் வன்னியர் சமூகத்தை சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்து கட்சி மற்றும் அரசின் நலத்திட்ட பணிகளை கவனிக்கக் கூறியது திமுக தலைமை. அவர் வாரத்திற்கு ஒருமுறை தருமபுரியில் முகாமிட்டு கட்சி மற்றும் அரசின் நலத்திட்ட பணிகளை கவனித்து வருகிறார்.

 இருந்த போதும், தருமபுரி திமுகவில் உட்கட்சி பூசல் தொடர்வதாக தெரிகிறது. பல்வேறு அணிகளாக பிரிந்து கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவதாக தலைமைக்கு அடிக்கடி புகார்கள் பறக்கின்றன.

  இந்நிலையில் திமுகவில் விரைவில் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்பசேகரன் மற்றும் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் யார் பதவி காலியாகுமோ என்ற பதற்றத்தில் இருந்து வருகின்றனர்.

  இந்நேரத்தில்  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த நம்மாண்டஹள்ளியில் நடந்த அரசு நிகழ்சியில் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணி மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் எம்.பி.செந்தில்குமார், திமுக பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். 

விழா மேடையில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம் "கிராமத்தில் உள்ள மக்கள் ஆர்ட் அட்டாக்(லீமீணீக்ஷீt ணீttணீநீளீ) வந்து இறந்தால் பேய் தாக்கி இறந்துவிட்டதாக நினைக்கின்றனர். அதே போல் உழைப்பவளர்களுக்கு கூட சுகர் பிபி வருகிறது.

  அனைவரும் டென்சனோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் பதவியில் உள்ள அமைச்சர்களுக்கு பதவி போயிவிடுமோ, ஒன்றிய செயலாளர்களுக்கு பதவி போயிவிடுமோ, மாவட்ட செயலாளர்களுக்கு பதவி போயிவிடுமே என டென்சனோடு இருப்பதாக இரண்டு மாவட்ட பொறுப்பாளர்களை பார்த்து கூறினார்.

 மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணன் யாரை பார்த்து செல்கிறார் என புரியாமல் ஒருவரை ஒருவரை பார்த்து சிரித்துக்கொண்டனர்"