அமைச்சரின் மருமகன் தலையீட்டால் உட்கட்சித் தேர்தலில் மோதலாம்!
மு.ராஜா,
அமைச்சரின் மருமகன் உட்கட்சித் தேர்தலில் அடியாட்களை வைத்து அடிதடியில் ஈடுபட்டு கலாட்டா செய்வதாகவும் ரவுடித்தனம் செய்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாகவும் உத்தமபாளையம் கட்சித் தொண்டர்கள் புகார்.
இது பற்றின விவரம் வருமாறு,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் பேரூர் செயலாளருக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்க வந்த சிட்டிங் உத்தமபாளையம் திமுக பேரூர் பொறுப்பாளர் முகமது மீரானையும் அவருடன் வந்த உத்தமபாளையம் 11வது வார்டு கவுன்சிலர் ஷேக் கமருதீன் அவர்களையும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அவர்களின் மருமகன் அடியாட்களை ஏவிவிட்டு விரட்டியிருக்கிறார்.
திமுக தலைமை கழகம் அறிவித்த தேர்தல் அதிகாரி ஈரோடு இறையன்பு முன்னிலையிலேயே தலைமை அறிவித்தவரின் முன்னிலையில் மரியாதை தராமல் அடிதடியில் ஈடுபட்டனர்.
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவர் முன்னிலையில் உத்தமபாளையம் திமுக பேரூராட்சி செயலாளருக்கு போட்டியிட வந்தவர்களிடம் கலாட்டா செய்துள்ளனர்.கட்சியின் நிலைபாட்டைரோரமாக வைத்துவிட்டு இப்படி செயல்பட்டனர்.
அமைச்சர் பெயரைச் சொல்லி அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரே இப்படி செயபட்டால் மக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என உத்தமபாளையம் திமுக தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் திமுக தலைமைக் கழகம் அறிவித்த தேர்தல் அதிகாரி ஈரோடு.இறையன்பு நேரடியாக கூட்டத்தில் இறங்கி அமைச்சர் மருமகனின் ஆதரவாளர்கள் அடியாட்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட 11வது வார்டு கவுன்சிலர் ஷேக் கமருதீன் அவர்களை காப்பாற்றினார்.
மேலும் அமைச்சரின் மருமகன் உட்கட்சித் தேர்தலில் அடியாட்களை வைத்து அடிதடியில் ஈடுபட்டு கலாட்டா செய்வதாகவும் ரவுடித்தனம் செய்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாகவும் உத்தமபாளையம் கட்சித் தொண்டர்கள் புகார் கூறூவதோடு,
திமுக தலைமைக்கழகம் தேனி தெற்கு மாவட்ட பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.