23 கோடி வரி பணம் என்னாச்சு? திமுக கவுன்சிலர்கள் கோஷம்!
ம.டெல்லிராஜன்,
23 கோடி வரி பணம் என்னாச்சு? என்று திமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியதால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் திண்டிவனம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் 14 திமுக கவுன்சிலர்கள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர் முன்பு தரையில் அமர்ந்து 23 கோடி வரி பணம் என்னாச்சு என கோஷம் போட்டனர்.
மேலும் இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது 23 கோடி வரி வசூல் செய்யப்பட்ட பணம், 33 வார்டுகளில் என்ன செய்தீர்கள் என அனைத்து கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பினர். அதுமட்டும்மல்லாமல் நகராட்சி நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. திண்டிவனம் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும் கவுன்சிலர்களின் கோரிக்கை மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.
இங்கு நடைபெற்ற அனைத்து நகர மன்ற கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு எட்டப்படவில்லை. அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகள் செய்யவில்லை எனவும் அனைத்து கவுன்சிலர்களும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக கவுன்சிலர் கார்த்திக் என்பவரிடம் நகராட்சி ஓட்டுநர் மோதலில் ஈடுபட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதற்கு நகராட்சி ஆணையர் உரிய பதில் அளிக்கவில்லை அதன் காரணமாக அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 14 திமுக கவுன்சிலர்கள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர் முன்பு தரையில் அமர்ந்து 23 கோடி வரி பணம் என்னாச்சு என கோஷம் எழுப்பினர். இதனால் நகராட்சியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
அப்புறம் இருதரப்பும் ராசியாகிவிட்டது தனிக்கதை.

admin
