நடத்த விட மாட்டோம்! ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விஷ்ணு பிரசாத் எம்பி பேட்டி!

நடத்த விட மாட்டோம்! ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விஷ்ணு பிரசாத் எம்பி பேட்டி!

கு.அசோக்,

 ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த விட மாட்டோம், ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களுக்கு எதிரானதுஅதனை நடத்த விடமாட்டோம் என கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆற்காட்டில் பேட்டியளித்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான விஷ்ணு பிரசாத் வருகை தந்தார்.

 அவருக்கு ஆற்காடு தாஜ்புரா  பகுதியில் தமிழ்நாடு மாநில மனித உரிமை கழக தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பாஜக அரசால் ஒரு மாநிலத்திலே முறையாக தேர்தலை நடத்த முடியவில்லை இது தான் அவர்களின் கை வண்ணம்.

 அப்படி இருக்கையில் எப்படி இவ்வளவு பெரிய நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

   நடக்க முடியாத, நடக்க இயலாத, நடக்க கூடாத காரியம் இது. ஏனென்றால் ஜனநாயகம் நிலைநாட்டபட வேண்டும், மக்களுக்கு உரிய அங்கீகாரம், போதி அவகாசம் கொடுக்க வேண்டும்.

  ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த விட மாட்டோம். காணாமல் போன கட்சிகள் விஜய்யை அழைக்கிறார்கள் என மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கேட்ட கேள்விக்கு அவருக்கெல்லாம் முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை,தேவையற்ற ஒன்று என விமர்சனம் செய்தார்.

  பெல் தொழிற்சாலை அமைய நிலம் வழங்கியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்தார்.

  தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவர் அரசியல் செய்கிறார் பொறுத்திருந்து பார்ப்போம் என சொன்னார்.