தாக்கரே சாம்ராஜ்யத்தை அசைத்த ஷிண்டே! சின்னத்துக்கு 2,000/-கோடியாம்!

தாக்கரே சாம்ராஜ்யத்தை அசைத்த ஷிண்டே! சின்னத்துக்கு 2,000/-கோடியாம்!

 ஜார்ஜ்.ரவி,

  மகாராஷ்டிரத்தில் தாக்கரே குடும்பம் என்றால் அவர்களை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்கிற நிலை இருந்தது. அவர்கள் சிவசேனா என்கிற அமைப்பு மற்றும் கட்சியை துவக்கி மாநில மக்களை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடன் என்றைக்கு பாஜக நட்பை பெற்றதோ அன்றைக்கே அதன் அடிக்கல் அசைக்கப்பட்டுவிட்டது.

 அந்த வகையில் இன்று கட்சியும் சின்னமும் பறிபோன நிலையில் வாரிசு உத்தவ் தாக்கரேவை புலம்ப விட்டுள்ளார்கள்.

 இந்நிலையில் உத்தவ் தாக்கரே தன்னுடைய கையாலாக தனத்தைக் குறித்து வெளிப்படையாகவே தகவல்கள் பறி மாறிக் கொண்டிருக்கிறார்.

 முதலாவதாக அவரது பிரச்சார பீரங்கியான சஞ்சய் ராவத் எம்.பி.மூலம் வாய்ஸ் கொடுத்துள்ளார்.,

  அவர் கூறியிருப்பதாவது,

  முதலமைச்ச ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டதில் முறைகே நடந்துள்ளது.

   சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.   சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன்.

   இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் இது குறித்து ஆதாரங்களுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

   தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளியிடுவேன் நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என தெரிவித்துள்ளார். 

 வழக்கின் விவரம்

   மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.ரப்போது அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக குரல் எழுப்பி

 பல எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மாற்று அணியாக மாறினார்.

 பின்னர் பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

  அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

  எதிர்முனையில் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது.

   இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது. சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

  ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

  இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

  இது ஒரு புறம் இருக்க, மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை. பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது.

    ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது அநீதி ஆகும். இது கேவலமான அரசியல். சிவசேனாவுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால் தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் முன்பு எங்களை சந்தித்திருக்க வேண்டும். சிவசேனா ஒருபோதும் முஸ்லிம்களுக்கும், வட இந்தியர்களுக்கும் எதிரானது இல்லை. இந்தியாவை தாய் நாடாக கருதுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்.

   அரசியல் கட்சிகள் பா. ஜ.க விடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  உத்தவ் தாக்கரே பேசியிருக்கிறார்.