மூதாட்டியை கொட்டி கொலை செய்த குளவிகள்!

கு.அசோக்!
நாட்றம்பள்ளி, சின்னசாமி கவுண்டர் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மூதாட்டி மரத்தின் நிழலில் நிழலில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட போது குளவிகள் கொட்டி உயிரிழந்தார்
திரும்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி சின்னசாமி கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்த ஜெயா(60)இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஆடுகளை அதே பகுதியில் உள்ள சிவா என்பவரின் விவசாய நிலத்திற்கு மேச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு விவசாய நிலத்தில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.
அப்போது அங்கு செங்குளவி கூடு கட்டி இருந்த நிலையில் கூட்டில் இருந்த செங்குளவிகள் மூதாட்டியை சூழ்ந்து கொட்டியுள்ளது.
இதனால் மூதாட்டி அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்று பொதுமக்கள் மூதாட்டி மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஜெயா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார்.இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளவிகள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.