சேண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!

சேண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!

                                                                                                                                                                                                                       ஜி.கே.சேகரன்,

  தனியார் கேண்டினீல் சேண்ட் விட்ச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் கவலைக்கிடம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  - போலீஸ் விசாரணை

  இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரில் உள்ள ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் காதர்ஷா  என்பவருக்கு சொந்தமான ரஷீத் கேண்டின் உள்ளது.

 அங்கு, நேற்று மாலை சல்மான் (10) ,ஜான்சன் (9),ரூபன்(7) , ஆகிய மூன்று பேரும் சேண்ட் விட்ச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்  இதுகுறித்து ராணிப்பேட்டை  காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

   மேலும் ரஷீத் கேண்டீனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உணவு பொருட்களின் பாதுகாப்பு தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்

   தனியார் கேண்டீனில் சேண்ட் விட்ச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.