அதிமுக வேட்பாளரை எதிர்நோக்கும் வேலூர், அணைக்கட்டு பகுதி வாக்காளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.
சுயேட்சை வேட்பாளர்கள் என்று பார்த்தால் எட்டு பேர் சண்முகம் என்கின்ற பெயரில் வேட்பாளர்களாக உள்ளனர்.
அதேபோல் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இஸ்லாமிய வாக்குகளை பிரிப்பதற்காக கில்லாடி தனம் பண்ணவருக்கே கில்லாடி வேலையை காட்டி இருக்கிறார்கள்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக திமுக பாஜக வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.
அதிமுக வேட்பாளர்,
அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் பசுபதி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இன்று மார்ச் 30, ஆம்பூரை அடுத்த மின்னூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர், தேமுதிக, புதிய தமிழகம், மற்றும் கூட்டணியினர் உடனிருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சாலையில் இறங்கி மக்களை சந்தித்த அவரை, பல பகுதிகளில் வாக்காளர்கள் வரவேற்றனர். அப்போது வேட்பாளர் பசுபதி குழந்தையை கொஞ்சியும், முதியவர்களை சேர்த்தனைத்தும் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரை எதிர்பார்த்து, கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய சட்டமன்ற வாக்காளர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஒரு சிலரின் சுறுசுறுப்பு போதவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
அதற்கு ஆறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட அளவிளான நிர்வாகிகள், கிளை மற்றும் உள்ளுர் நிர்வாகிகளை முடுக்கிவிட வேண்டும், அதில் வேகம் காட்ட வேண்டும் என்கிறார்கள்.
திமுக வேட்பாளர்
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேவலாயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மலை கிராமமான பீமன்குளம் பகுதியில் உள்ள சென்றாயன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அனை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் வேன் மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்ட கதிர் ஆனந்த், ஆலங்காயம் பகுதியில் தூய பவுல் லுத்திரன் திருச்சபைக்கு சென்றார். அப்போது அவர் புனித வெள்ளி சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டு தேவாலயத்தில் இருந்தவர்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
பா.ஜ.க.வேட்பாளர்,
கேவிக்குப்பம் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரித்தார். இவர் வாக்காளர்களை ஒரே இடத்தில் கூட்டி மேடையேறி வாக்கு சேகரிக்கும் பாணியை கையாள்கிறார்.
அவர் பேசுகையில் திமுக பொய்யை மட்டுமே கூறுகிறது. கல்வி கடன் ரத்து என்றார்கள் மேலும் நகையை அடமானம் வைத்தால் நகை கடன் ரத்து என்றார்கள் மேலும் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வோம் என்றார்கள் ஆனால் இதனை எல்லாம் செய்யாமல் போதையின் பிடியில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றார்.
குறிப்பு:-பாஜக பிரச்சார கூட்டத்துக்காக அழைத்துவரப்பட்டிருந்த மக்கள், அங்கு மிச்சர் பொட்டலங்களுக்காக தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
வேட்பாளரின் பேச்சை தவிர்த்து விட்டு மிச்சர் பொட்டலங்களை நோக்கி ஓடோடி சென்ற அவர்களுக்கு வேனில் இருந்து சிறுவர்கள் மிச்சர் பொட்டலங்களை எடுத்து வீசினர்.
அதை அங்கு கூடியிருந்தவர்கள் லாவகமாக கேட்ச் பிடித்து எடுத்து கொண்டு நடையை கட்டினர்.
ஓ ஓ....... அது கூட்டின்னு வந்த கூட்டமா?