வாக்கிங் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர்!

வாக்கிங் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர்!

  உ.சசிகுமார்,

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று மார்ச் 30 மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

 இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 

 அதற்காக சேலத்தில் தங்கிய மு.க.ஸ்டாலின், காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.மேலும் அங்கிருந்த  கடையில் முதல்வர்  டீ அருந்தினார்.